Sunday, April 30, 2017

•அப்பாவி பொதுமகனை மனித கேடயமாக பயன்படுத்திய இந்திய ராணுவம்!

•அப்பாவி பொதுமகனை மனித கேடயமாக பயன்படுத்திய இந்திய ராணுவம்!
•இனியாவது ஈழத்தில் இந்திய ராணுவம் எவ்வளவு கொடுமை புரிந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கடா!
காஸ்மீரில் வெறும் 7 வீதம் மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளது. ஆனால் அந்த தேர்தலை இந்திய அரசு இடைநிறுத்தவில்லை. அதேவேளை சென்னையில் யாரோ ஒரு வேட்பாளர் பணம் வழங்கினார் என்று தேர்தலையே நிறுத்தியுள்ளது இந்திய அரசு.
இது ஜனநாயகத்தை காப்பாற்றும் செயல் என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால் இது இந்திய ஜனநாயகம் அல்ல. மாறாக இது இந்துத்துவ ஜனநாயகம்.
காஸ்மீரில் தேர்தலில் வாக்களிக்க சென்ற அப்பாவி பொதுமகன் ஒருவரை இந்திய ராணுவம் தமது வண்டியில் மனித கேடயமாக கட்டிப் பயன்படுத்தியுள்ளனர்.
பாரூக் அகமது என்பவரை கொடூரமாக தாக்கி கல்வீசியவர்களில் ஒருவர் என கைது செய்துள்ளனர். அவர் மீது கல்வீசியவன் என எழுதி ஒட்டி தங்கள் ஜீப்பில் மனிதக் கேடயமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
30-40 கிமீ வரை ஃபரூக்கை மனிதக் கேடயமாக பயன்படுத்தியபின் அவரை விடுதலை செய்துள்ளனர். அவரின் தாகத்துக்கு நீர் தரவில்லை. கொஷ்போரா கிராமத்து மக்கள் ஃபரூக்கை விடுதலை செய்ய சொன்னதற்கு, இடைத் தேர்தலில் கல்வீசி தாக்கியவன் என கூறியிருக்கிறார்கள்.
இவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கும் ஃபரூக், நான் மனிதனா அல்லது பொம்மையா?… என்று கேட்டிருக்கிறார். இடது கை பாதிக்கப்பட்டதால் அவரது சால்வை தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களால் அவர் ஜனநாயக செயல்முறை மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டார். இதனால் ஃபரூக், “நான் எப்போதும் என் வாக்குரிமையை தவறவிட்டதில்லை, இதன்பிறகு எனக்கு வாக்களிக்கும் எண்ணமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் உலகில் மிகப்பெரிய நான்காவது ராணுவம். அது கட்டுப்பாடு மிக்க ராணுவம் என இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அந்த ராணுவம்தான் காஸ்மீரில் இவ்வாறு சட்டவிரோதமாக செயற்படுகிறது.
இந்திய ராணுவம் ஈழத்தில் இருந்தபோது புலிகள் இயக்கம் மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தனர். உண்மையில் இந்திய ராணுவமே ரோந்து வரும்போது மக்களை கேடயமாக பயன்படுத்தியிருந்தது.
மக்களை கேடயமாக பயன்படுத்தும் இந்திய ராணுவத்தின் செயற்பாடு தற்போது ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது.
தனது சொந்த மக்களையே ஈவு இரக்கமின்றி சட்டவிரோதமாக மனித கேடயமாக பயன்படுத்தும் இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழர்களுக்கு எத்தனை கொடுமையை இழைத்திருக்கும் என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து மே மாதம் வருகிறது. ராஜீவ் காந்தி படுகொலையை கண்டித்து கட்டுரை எழுதப் போகிறவர்கள் இனியாவது இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment