Sunday, April 30, 2017

•“இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம். இந்தியாவே யுத்தத்திற்கு உதவி செய்தது” - மகிந்த ராஜபக்ச

•“இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம்.
இந்தியாவே யுத்தத்திற்கு உதவி செய்தது” - மகிந்த ராஜபக்ச
இனி கலைஞர் என்ன சொல்லப் போகிறார்?
இந்தியாவுக்காகவே தமிழ் மக்கள் மீது யுத்தம் நடத்தப்பட்டதாகவும் இந்தியாவே தமிழ் இன அழிப்பிற்கு அதிக உதவிகளை வழங்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
ஏற்கனவே முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவும் இதே கருத்தை கூறியிருக்கிறார். இந்தியா இதுவரை இந்த கருத்துகளை மறுக்கவில்லை.
தமிழ் மக்களுக்காக கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்ததாக கூறிவரும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இதற்கு என்ன சொல்லப்போகிறார்?
முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் கலைஞர் கருணாநிதி மற்றும் அவர் மகள் கனிமொழி ஆகியோருக்கும் பங்கு உண்டு என மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி கடந்த வருடம் குற்றம் சாட்டியிருந்தார்.
தமக்கு இனப்படுகொலையில் பங்கு இல்லை என்பது மட்டுமன்றி ஆனந்தி யார் என்றே தனக்கு தெரியாது என்றும் கனிமொழி அப்போது மறுத்திருந்தார்.
ஆனால் இப்போது மகிந்த ராஜபக்சவின் கூற்றானது தமிழின அழிப்பில் இந்திய அரசுக்கு மட்டுமல்ல கலைஞருக்கும் பங்கு உண்டு என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இங்கு வேதனை என்னவென்றால் இத்தனை அழிவுக்கு பின்னரும் இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா தமிழருக்கு உதவும் என்று சில தமிழ் தலைவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதுதான்.
அதுவும் இன்னும் சிலர் “இந்து தமிழீழம்” கேட்டால் இந்தியா உதவும் என்று நம்பிக் கொண்டு சிவசேனை இயக்கம் ஆரம்பித்துள்ளார்கள்.
வெளிநாடுகளில் இருக்கும் சில முன்னாள் போராளி பிரமுகர்கள் இந்திய உளவுப்படை கூப்பிட்டிருக்கு என்று சொல்லிக்கொண்டு பைல் கட்டுகளுடன் கதை விட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
சம்பந்தர் அய்யா , மாவை சோனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைகலநாதன் போன்றவர்கள் தமது சொந்த சுயநலன்களுக்காக இந்திய ஆக்கிரமிப்பிற்கு துணை போகின்றார்கள்.
இந்திய எதிரியை இனம் கண்டு எதிர்க்காதவரை தமிழ் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து ஒருபோதும் விடுதலை பெற முடியாது.

No comments:

Post a Comment