Sunday, April 30, 2017

•சிரிய குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் எனில் தமிழ்க் குழந்தைகள் சாத்தானின் குழந்தைகளா?

•சிரிய குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் எனில்
தமிழ்க் குழந்தைகள் சாத்தானின் குழந்தைகளா?
சிரிய நாட்டில் குழந்தைகள் மீது ரசாயண தாக்குதல் நடத்தியால் சிரிய நாட்டின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரிய நாட்டுக் குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் என்றும் அவர்கள் மீது ரசாயண தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் தமிழ் குழந்தைகள் மீது ரசாயண தாக்குதல் நடத்தியபோது மௌனமாக இருந்த அமெரிக்கா இன்று சிரிய குழந்தைகள் மீதான தாக்குதலை கண்டிப்பது ஏன்?
சிரிய நாட்டுக் குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் தமிழ்க் குழந்தைகள் சாத்தானின் குழந்தைகளா? அதனால்தான் அமெரிக்கா தமிழ் குழந்தைகள் கொல்லப்பட்டதை கவனிக்கவில்லையா?
ரசாயண தாக்குதல் நடத்தியதை சிரிய அரசு மறுத்துள்ளது. சிரிய அரசு தாக்குதல் நடத்தியது இன்னும் நிரூபிக்கப்டவில்லை. ஆனால் அதற்குள் அவசரமாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆனால் இலங்கைஅரசு தமிழ் குழந்தைகள் மீது ரசாயண தாக்குதல் நடத்தியது சாட்சியங்கள் மூலம் ஜ.நா வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இலங்கை அரசு கேட்காமலே அமெரிக்கா 2 வருட அவகாசம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
சிரியாவுக்கு ஒரு நியாயம். இலங்கைக்கு இன்னொரு நியாயம். இதுதான் அமெரிக்க நியாயமா?
ஒருபுறம் சிரிய நாட்டு அகதிகள் அமெரிக்காவிற்குள் வருவதை தடை செய்துவிட்டு மறுபுறம் சிரிய குழந்தைகளுக்காக இரக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா நிலீக் கண்ணீர் வடிக்கிறது.
அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளாமல், அமெரிக்கா தமிழர்களுக்கு நீதி பெற்று தரும் என்று இன்னமும் நம்பும் தமிழ் தலைவர்களை என்னவென்று அழைப்பது?
அமெரிக்காவில் வசித்து வரும் நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன், தமிழ் மக்களுக்காக இந்த நியாயத்தை அமெரிக்காவிடம் கேட்பாரா?

No comments:

Post a Comment