Sunday, April 30, 2017

•தமிழக விவசாயிகளின் போராட்டம் தமிழர்களுக்கு கற்று தரும் பாடம் என்ன?

•தமிழக விவசாயிகளின் போராட்டம்
தமிழர்களுக்கு கற்று தரும் பாடம் என்ன?
பிரதமர் அணிந்திருந்த துப்பட்டாவை ஒரு பெண் இணையம் மூலம் கேட்ட போது உடனே அதனை அனுப்பி வைத்தார் பிரதமர் மோடி.
ஆனால் 29 நாட்களாக பிரதமர் வாசலில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை இந்த பிரதமருக்கு.
ஏனெனில் துப்பட்டா கேட்ட பெண் தமிழர் இல்லை. உடனே துப்பட்டா அனுப்பி வைத்தார். ஆனால் விவசாயிகள் தமிழர்கள் என்பதால் அவர் அக்கறை காட்டவில்லை.
குல்புஜன் யாதவ் என்பவர் பாகிஸ்தானில் உளவு மற்றும் நாச வேலைகளில் ஈடுபட்டமைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உடனே, அவர் இந்திய குடிமகன் என்று அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அம்மையார் அக்கறை காட்டியுள்ளார்.
ஆனால் இதுவரை 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில்கூட மீனவர் பிரிட்டோ கொல்லப்பட்டுள்ளார். ஒருமுறைகூட இந்திய அரசு சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் இந்திய குடிமகன் என்று அக்கறை கொள்ளவில்லை.
குல்புஜன் யாதவ் தூக்கில் இடப்பட்டால் பலூச்சிஸ்தானை தனிநாடாக இந்தியா அறிவிக்கும் என்று சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார். ஆனால் 600 தமிழக மீனவர்கள் கொல்லப்ட்டபோது தமிழீழத்தை தனிநாடாக இந்தியா அங்கீகரிக்கும் என்று ஒருமுறைகூட இந்த சுப்பிரமணியசுவாமி கூறவில்லை.
ஏனெனில் குல்புஜன் யாதவ் தமிழர் இல்லை. எனவே அவர் நலனில் இந்திய அரசு அக்கறை காட்டுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்கள்; தமிழர் என்பதால் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று இந்திய அரசு கூறுகிறது. ஆனால் இதே இந்திய அரசுதான் அண்மையில் முதலாளி மல்லையாவின் 9000 கோடி ரூபா கடனை தள்ளுபடி செய்துள்ளது.
ஏனெனில் மல்லையா தமிழர் இல்லை. எனவே அவருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் தமிழர்கள் என்பதால் கடன் தள்ளுபடி செய்ய மறுக்கப்படுகிறது.
தமிழக விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்ததால் இந்தியாவுக்கு அவமானம் என்று எச்.ராஜா கூறுகிறார்.
நிர்வாண சாமிகளை தேடிச் சென்று பிரதமர் வணங்கிறார், நிர்வாண சாமிகளுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு அவமானம் இல்லையா?
தமிழர்கள் இந்தியர்களாக இருப்பதால் தான் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராட வேண்டிய நிலை உள்ளது.
தமிழர்கள் இந்தியர்களாக இருப்பதால்தான் 600 தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற பின்பும்கூட தமிழர்கள் மௌனமாக இருக்க வேண்டியுள்ளது.
தமிழர்கள் இந்தியர்களாக இருப்பதால்தான் வருடம்தோறும் 85 அயிரம் கோடி ரூபா வரியாக இந்திய அரசுக்கு தமிழகம் கட்ட வேண்டியிருக்கிறது.
தமிழர்கள்தான் தம்மை இந்தியர்களான நினைக்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தமிழர்களை இந்தியர்களாக ஒருபோதும் கருதவில்லை.
எனவே தற்போது தமிழர் முன் உள்ள கேள்வி என்னவெனில்,
இந்தியர்களாக அடிமைகளாக இருக்கப்போகிறீர்களா? அல்லது
தனித் தமிழ்நாட்டில் சுதந்திரமாக இருக்கப்போகிறீர்களா?

No comments:

Post a Comment