Sunday, April 30, 2017

•தமிழ் மக்களை நேசித்த தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த தோழர் அஜித் ரூபசிங்காவுக்கு புரட்சிகர அஞ்சலிகள்.

•தமிழ் மக்களை நேசித்த
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த
தோழர் அஜித் ரூபசிங்காவுக்கு புரட்சிகர அஞ்சலிகள்.
தோழர் சண்முகதாசன் மறைவையடுத்து இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுசெயலாளராக இருந்துவந்த தோழர் அஜித் ரூபசிங்கா 03.04.2017 யன்று காலமானார்.
தமிழ் மக்களை நேசித்த , தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த தோழர் அஜித் ரூபசிங்காவின் மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்கும் ஒரு இழப்பாகும்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இறுதிவரை மாவோயிச சிந்தனைகளை உறுதியாக பின்பற்றி வந்த தோழர் அஜித் ரூபசிங்கா அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.
1990 ம் ஆண்டுகளில் தோழர் சண்முகதாசன் வீட்டுக்கு சென்றபோது தோழர் சண்முகதாசன் மூலம் தோழர் அஜித் ரூபசிங்காவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அப்போது அவருடன் அதிகம் உரையாட முடியவில்லை.
அமெரிக்காவில் கல்வி கற்றவர். அவர் விரும்பியிருந்தால் நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் தான் நேசித்த கொள்கையில் உறுதியாக இருந்தார்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இறுதிவரை மாவோயிஸ்ட்டாகவே வாழ்ந்தார்.
தமிழ் மக்கள் நல்லதொரு நண்பனை இழந்துள்ளனர்.
புரட்சி இயக்கம் நல்லதொரு தோழனை இழந்துள்ளது.

No comments:

Post a Comment