Sunday, April 30, 2017

•சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் பற்றி

•சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் பற்றி
நியூசிலாந்தில் வசித்து வரும் மனிதவுரிமை செயற்பாட்;டாளரான N.மாலதி அவர்கள் சிறப்புமுகாம் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை EPW என்னும் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.
1990ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஈழ அகதிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் இச் சிறப்புமுகாம்கள் குறித்து பிரபல இந்திய சஞ்சிகை பிரசுரம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக தமிழ் சஞ்சிகைகளே சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து மௌனம் காத்து வரும் நிலையில் பிரபல ஆங்கில சஞ்சிகை இதனை பிரசுரித்து வட இந்தியர்களும் இதனை அறிய வைத்துள்ளது.
அதுமட்டுமன்றி மாலதி அவர்கள் இந்திய சிறைவாசிகளின் நலனுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலமும் இச் சிறப்புமுகாம் விடயத்தை முன்னெடுக்க முயற்சி செய்து வருகிறார்.
தமிழ் மக்களின் ஆதரவை மட்டுமல்ல பரந்துபட்ட இந்திய மக்களின் ஆதரவை திரட்டுவதன் மூலமே இக் கொடிய சிறப்புமுகாமை மூட முடியும்.
அவ்வாறு இந்திய மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு மாலதி அவர்களின் இவ் முயற்சிகள் பெரிதும் பயன் அளிக்கும் என நம்புகிறோம்.
நீண்டகாலமாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் மாலதி அவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாலதி அவர்கள் எழுதிய ஆங்கில கட்டுரையை கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம்.

No comments:

Post a Comment