Sunday, April 30, 2017

•தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்!

•தோழர் தமிழரசனை நினைவில் கொள்வோம்!
14.04.2017 யன்று தோழர் தமிழரசனின் 72வது பிறந்த தினம்.
மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனை வழிகாட்டலில் தமிழ்நாடு விடுதலைக்காய் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் 72வது பிறந்த தினம்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என கூறியவர் தோழர் தமிழரசன்.
தமிழ்நாடு விடுதலை அடைந்தால் ஈழத் தமிழனும் விடுதலை அடைவான் என்று கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன்.
தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்து முழு இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு ஒருபோதும் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உதவாது. மாறாக மாபெரும் தமிழ் இன அழிவை மேற்கொள்ளும் என்று முள்ளிவாய்க்கால் அவலத்தை அன்றே எதிர்வு கூறியவர் தோழர் தமிழரசன்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கலக்க வேண்டும் என்று கூறியதோடு தானே அதற்கு முன்மாதிரியாக விளங்க முயற்சி செய்தவர் தோழர் தமிழரசன்.
தோழர் தமிழரசன் ஒருபோதும் முதலமைச்சர் கனவு காணவில்லை. மாறாக தேர்தல் பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்தவர்.
தோழர் தமிழரசன் தமிழ் மக்களுக்காக உண்மையாகவே போராடினார். அதனால்தான் அவர் உளவுப்படைகளின் மூலம் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்.
அதனால்தான் அவரில் இருந்து ஆயிரம் ஆயிரம் தமிழரசன்கள் முளைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தோழர் தமிழரசனோடு நான் சேர்ந்து பயணித்த காலங்கள் மறக்க முடியாதவை. அவர் என்னை “தோழர்” என்று அழைத்து உரையாடியவை இன்றும் என் காதில் ஒலிக்கின்றன.
தோழர் தமிழரசனோடு கொண்டிருந்த புரட்சிகர உறவுக்காகவே இந்திய உளவுப்படை என்னையும் தோழர் நெப்போலியனையும் கொல்லும்படி ஈரோஸ் இயக்கத்திடம் உத்தரவிட்டிருந்தது.
நான் அதிர்ஸ்டவசமாக தப்பிவிட்டேன். ஆனால் தோழர் நெப்போலியன் இந்திய உளவுப்படையின் உத்தரவுக்கு அமைய ஈரோஸ் இயக்கத்தால் மலையகத்தில் கொல்லப்பட்டார்.
தோழர் தமிழரசனுடன் புரட்சிகர ஜக்கியத்தை உருவாக்கியவர் தோழர் நெப்போலியன். அவரை படுகொலை செய்தபோதும் அவர் காட்டிய பாதையில் நாம் தொடர்ந்து பயணிப்பதை இந்திய உளவுப்படைகளால் தடுத்துவிட முடியவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மக்கள் போராட்டம், விவசாயிகளின் போராட்டம் போன்றன தமிழ்நாடு விடுதலைக்கான அவசியத்தை மக்கள் மனதில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விதைத்துள்ளன.
பாராளுமன்ற பாதைமூலம் தீர்வு கிடைக்காது. ஆயுதப் போராட்ட பாதை மூலமே தீர்வு பெற முடியும் என்ற தோழர் தமிழரசனின் வழிகாட்டல் சரிதான் என்பதை கடந்தகால வரலாறு மக்களுக்கு நன்கு உணர்த்துகிறது.
தோழர் தமிழரசனின் வழிகாட்டலை மக்களுக்கு நன்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவருடன் பயணித்த எனது புரட்சிகர கடமை என உணர்கிறேன்.
எனது கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன். இது உறுதி. இதுவே அவரது பிறந்தநாளில் அவர் நினைவாக எனது வரிகள்.

No comments:

Post a Comment