Sunday, April 30, 2017

விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்ட இந்திய அரசைவிட கோமணத்துடன் விட்ட இலங்கை அரசு எவ்வளவோ மேல்!

•விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்ட இந்திய அரசைவிட
கோமணத்துடன் விட்ட இலங்கை அரசு எவ்வளவோ மேல்!
தமிழக விவசாயிகள் கடந்த 28 நாட்களாக தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகைகளையும் அம்பானி முதலாளியின் மனைவிகளையும் சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடிக்கு போராடும் விவசாயிகளை சந்திக்க நேரம் கிடைக்கவில்லையாம்.
விவசாயிகளை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தலைநகரில் அவர்களை நிர்வாணமாக ஓட விட்ட கொடுமையை அல்லவா அவர் செய்திருக்கிறார்.
விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்ட இந்திய அரசைவிட விவசாயிகளை கோமணத்துடன் ஊர்வலம் போகவிட்ட இலங்கை அரசு எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது.
•தமிழக மீனவனை சுட்டுக் கொன்றாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•தமிழக விவசாயி தற்கொலை செய்தாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•தமிழக தொழிலாளி ஆந்திராவில் கொலை செய்யப்பட்டாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•தமிழக லாரி டிறைவர் கர்நாடகாவில் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து விரட்டப்பட்டாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•தமிழக வியாபாரி கேரளாவில் சுடுநீர் ஊற்றி கொலை செய்யப்பட்டாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•இந்திய அரசின் அக்கறை எல்லாம் வருடம்தோறும் 85 ஆயிரம் கோடி ரூபாவை தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெற்றுக்கொள்வது மட்டுமே.
தமிழக விவசாயிகளே!
நீங்கள் மண்டை ஓட்டி ஏந்தி போராடினீர்கள். மோடி திரும்பிப் பார்க்கவில்லை.
நீங்கள் வீதியில் உருண்டு மன்றாடினீர்கள். மோடி திரும்பி பார்க்கவில்லை.
நீங்கள் கோமணத்துடன் நின்றீர்கள். மோடி திரும்பிப் பார்க்கவில்லை.
ஆனால் ஒரேயொரு முறை தமிழ்நாடு தனிநாடு ஆகும் என்று கூறிப்பாருங்கள். மோடி நிர்வாணமாக உங்கள் பின்னால் ஓடிவருவார்!

No comments:

Post a Comment