Sunday, April 30, 2017

நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர்மோடியால் தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாதா?

•நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர்மோடியால்
தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாதா?
நடிகை கௌதமி , நடிகை கஜோல் என நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடியால் போராடும் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை.
இந்தியா விவசாய நாடு என்கிறார்கள். ஆனால் இந்திய பிரதமர் முதலாளிகளை சந்திக்க காட்டும் ஆர்வத்தை விவசாயிகளை சந்திக்க காட்டுவதில்லை.
முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் இந்திய பிரதமர் மோடி வரட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்.
கடந்த 140 ஆண்டுகளில் மிகப் பெரிய வறட்சியை தமிழகம் சந்தித்துள்ளது. 90% வீதமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்னர். 300 விவசாயிகள் இதனால் தற்கொலை செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகளவான வறட்சியை சந்தித்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதனாலேயே வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரண நிதியாக 62138 கோடி ரூபாவை தமிழக அரசு கோரியிருந்தது.
ஆனால் இந்திய அரசு 2014 கோடி ரூபாவை மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. அதாவது தமிழ்நாடு கோரிய நிதியில் வெறும் 3% வீதம் மட்டுமே இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வருடந்தோறும் தமிழகத்தில் இருந்து 85 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு வரட்சி நிவாரண நிதியாக வெறும் இரண்டாயிரம் கோடி ரூபாவையே தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
தமிழக எம்.பி கள் 50 பேர் ஒன்று சேர்ந்து சென்றபோதும் அவர்களை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை.
தற்போது போராடும் தமிழக விவசாயிகளை சந்திக்குவும் அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
பிரதமரால் சந்திக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. போராடும் விவசாயிகளை பொலிசார் மூலம் அடித்து விரட்டுவது என்ன நியாயம்?
பாஜ.க மோடியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் மன்மோகன்சிங்காக இருந்தாலும் சரி தமிழக மக்களின் உணர்வுகளை ஒருபோதும் மதிபபதில்லை. எப்போதும் புறக்கணித்தே வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்தது போல் விவசாயிகளுக்காகவும் தமிழ் மக்கள் கிளர்ந்தேழ வேண்டும்.
வெடிக்கட்டும் மக்கள் போராட்டம்!

No comments:

Post a Comment