Sunday, April 30, 2017

•சிரியாவுக்கு ஒரு நியாயம் இலங்கைக்கு இன்னொரு நியாயம் இதுதான் வல்லரசுகளின் நியாயம்?

•சிரியாவுக்கு ஒரு நியாயம்
இலங்கைக்கு இன்னொரு நியாயம்
இதுதான் வல்லரசுகளின் நியாயம்?
சிரிய அரசு மேற்கொண்ட இரசாயண தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதைக் கண்டித்த வல்லரசுகள் இலங்கையின் இரசாயண தாக்குதலை கண்டிக்காதது என்ன நியாயம்?
இறுதியுத்தத்தின்போது இலங்கை அரசு அப்பாவி மக்கள்மீது இரசாயண தாக்குதல் மேற்கொண்டமை பல சாட்சியங்களினூடாக நிரூபிக்கப்ட்டுள்ளது.
ஆனால் இலங்கையின் இரசாயண தாக்குதலை கண்டிக்காதது மட்டுமல்ல இலங்கை அரசுக்கு மேலும் 2 வருட அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமது ராணுவத்தை தாம் ஒருபோதும் விசாரிக்கமாட்டோம் என இலங்கை ஜனாதிபதி பிரதமர் எல்லோரும் உறுதியாக கூறிவரும் நிலையில் 2 வருட அவகாசம் கொடுப்பது எதற்காக?
ஒரேவிடயத்தில் வல்லரசு நாடுகள் இலங்கைக்கு ஒரு நியாயமும் சிரியாவுக்கு இன்னொரு நியாயமும் காட்டுகின்றன.
ஒருவேளை முள்ளிவாய்க்காலில் எண்ணெய் கிணறு இருந்திருக்குமேயானால் வல்லரசுகளின் நியாயம் வேறு விதமாக இருந்திருக்குமோ?

No comments:

Post a Comment