Sunday, April 30, 2017

•வைகோ மீதான வழக்கு வாபஸ் பெற வேண்டும்!

•வைகோ மீதான வழக்கு வாபஸ் பெற வேண்டும்!
•வைகோ உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்!!
விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது சட்ட விரோதம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையிலும் வைகோ மீது அவ் வழக்கு போடப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் அரசியல் பழி வாங்கலாக போடப்பட்ட .இவ் வழக்கு 8 வருடங்களாக வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகிறது.
வைகோ விரும்பியிருந்தால் தான் இப்போது விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்று மற்ற தலைவர்களை போல் கூறி தப்பியிருக்கலாம்.
ஆனால் அவரோ “நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன். இன்றும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறேன். நாளையும் விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன்” என்று உறுதியாக கூறியுள்ளார்.
வைகோ வின் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக அவர் சிறையில் வாடும்போது அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை என கருதுகிறேன்.
ஜெயா அம்மையார் ஊழல் செய்து அதற்காக 4 வருட தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது பல ஈழ தமிழ தலைவர்கள் அவரின் விடுதலைக்காக குரல் கொடுதிருந்தார்கள்.
ஜெயா அம்மையாருக்காக குரல் கொடுத்த அந்த ஈழ தமிழ் தலைவர்கள் ஈழத் தமிழருக்காக சிறைவாசம் அனுபவிக்கும் வைகோ விற்காக இதுவரை குரல் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
1991ம் ஆண்டில் நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை பழனி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் கையொப்பம் வாங்கவென வைகோ அவர்கள் மதுரை சிறைக்கு வந்திருந்தார்.
அப்போது சிறையில் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அறிந்த அவர், “ ஈழத் தமிழர்களை யாருமற்ற அனாதை அகதிகள் என்று நினைத்து விடாதீர்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் நான் வருவேன்” என்று சிறை கண்காணிப்பாளரிடம் எச்சரித்திருந்தார்.
என்னை யார் என்று தெரியாத நிலையில் நான் ஒரு ஈழத் தமிழன் என்பதற்காக அவர் குரல் கொடுத்த அந்த உணர்வை நான் ஒருபோதும் மறக்க முடியாது.
தமிழக அரசே!
வைகோ மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறு!
வைகோ அவர்களை உடனே விடுதலை செய்!

No comments:

Post a Comment