Sunday, April 30, 2017

பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட "லண்டன் தமிழர் சந்தை

பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட "லண்டன் தமிழர் சந்தை"
லண்டனில் கறோ என்னும் இடத்தில் நேற்றும் இன்றும் காலை 10 மணி முதல் மாலை 8 மணிவரை "லண்டன் தமிழர் சந்தை" இடம்பெற்றது.
நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் வர்த்தக நிறுவனங்கள் கலந்துகொண்ட இவ் நிகழ்வு பிரித்தானிய வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம்.
இது தமிழ் வர்த்தகர்களை பிரித்தானிய மற்றும் சர்வதேச அரங்கில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக உருவாக்குவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது
தமிழ் இனத்திற்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்னும் உண்மையான நோக்கம் கொண்ட திருவாசகம் என்பவர் தலைமையில் இவ் அமைப்பு செயற்படுகின்றது.
ஒருபுறம் வர்த்தக நிறுவனங்களின் பிரச்சாரம். இன்னொருபுறம் கலை நிகழ்வுகள். இடையில் சிற்றுண்டிகள் என ஒரு திருவிழா போல் இருந்தது.
பல தமிழ் நிறுவனங்களையும் பல்லாயிரம் தமிழர்களையும் இரு நாட்கள் ஓரிடத்தில் கூட வைத்ததில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்.
ஆனால் லைக்கா போன்ற பெரிய புகழ் பெற்ற நிறுவனங்களையும் இதில் இணைத்திருந்தால் சாதனையாக அமைந்திருக்கும்.
அடுத்த வருடம் இன்னும் பல நிறுவனங்களை இணைக்க முயல்வதோடு அவற்றின் மூலம் தமிழ் மக்கள் பயன் பெறும் வகையில் செய்ய வேண்டும்.
தற்போதைய மண்டபம் அதிக மக்களையும் அதிக வர்த்தக நிறுவனங்களையும் கொள்ளும் வசதி குறைவாக இருக்கிறது. அடுத்த வருடம் இதைவிட பெரிய மண்டபத்தை ஒழுங்கு செய்வது நல்லது.
சில ஆலோசனைகள்,
(1) நிகழ்வின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த பயன்கள் விபரத்தை மக்களுக்கு அறிய தரவேண்டும்.
(2) நிகழ்வு குறித்த மக்களின் விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை பெற வேண்டும்.
(3) இந்திய மற்றும் சிங்கப்பூர் மலேசிய தமிழர்களையும் உள்ளடக்கிய “லண்டன் தமிழர் சந்தை” நடத்தப்பட வேண்டும்.
(4) தமிழ் வர்த்தக நிறுவனங்களில் தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
(5) தமிழ் வர்த்தகர்கள் தேவையான உதவிகள் ஆலோசனைகள் பெறுவதற்கு ஒழுங்கு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment