Sunday, April 30, 2017

•இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சுமந்திரா?

•இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சுமந்திரா?
நடந்தது இனப்படுகொலை அல்ல. போர்க்குற்றம் என்றாய்.
ஏதோ சாதுரியத்துடன்தான் கூறுகிறாய் என நம்பினோம்.
சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றாய்.
கெட்டித்தனமாய் நீ காய் நகர்த்துவதாக சொன்னார்கள்.
சமஸ்டியை விட்டுக் கொடுப்போம் என்றாய். ஏனெனில் வார்த்தைகளில் தொங்க வேண்டியதில்லை என்று விளக்கம் சொன்னாய்.
ஆனால் இத்தனையும் நீ கூறியது ஜனாதிபதி சட்டத்தரணி பதவி எடுப்பதற்காகத்தான் என்பது இப்போதுதானே எமக்கு புரிகிறது.
உனது நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்ற தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டாயே சுமந்திரா!
எல்லா இளைஞர்களும் போராட சென்றபோது நீமட்டும் இந்தியா சென்று படித்தாய்.
எந்தவித தியாகத்தையும் செய்யாது பாராளுமன்ற பதவியை பெற்றாய்.
ஆயுதம் தாங்கிய இளைஞர்களால் என்ன சாதிக்க முடிந்தது என்று கொஞ்சம்கூட வெட்கப்படாமல் கேட்டாய்.
உனக்கு அதிரடிப்படையின் பாதுகாப்பு வேண்டு மென்பதற்காக தமிழ் இளைஞர்களை காட்டிக் கொடுத்தாய்.
சம்பந்தர் அய்யா சொகுசு மாளிகையில் தங்கியிருக்க அவர் ஒரு சின்ன அறையில் வசிப்பதாக பொய் சொன்னாய்.
சம்பந்தர் அய்யாவுக்கு வீடு திருத்தவும் சொகுசு வாகனம் வாங்கவும் 5 கோடி ரூபா பாராளுமன்றத்தில் பிரோரணை வந்ததை சுட்டிக் காட்டியபோது வழக்கம் போல் கள்ள மௌனம் காத்தாய்.
பூனை இல்லாத வீட்டில் சுண்டெலிகள் துள்ளி விளையாடுமாம். ஆதுபோல் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் ரொம்பவும் ஆட்டம் போடுகிறாய்.
ஆடு ராசா ஆடு. நல்லாய் ஆடு. இதற்காத்தானே ஆசைப்பட்டாய்.

No comments:

Post a Comment