Saturday, February 27, 2021

நாய்கள்

•நாய்கள் ஒரு வடைக்கும் பிளேன்ரீக்கும் வாலை ஆட்டுகின்றன. யாழ் இந்திய தூதரின் காலை நக்கித் தொலைக்கின்றன! சித்தார்த்தன். பாராளமன்ற உறுப்பினர். புளட் அமைப்பின் தற்போதைய தலைவர். தமிழ் தலைவர்களில் ஒருவர். யாழ் இந்திய தூதர் ஏற்பாட்டில் நடைபெற்ற காந்தி நினைவு அஞ்சலியில் கலந்துகொண்டதுடன் அதை பெருமையாக தன் முகநூலில் பகிர்ந்தும் உள்ளார். இதே காந்தி சிலைக்கு பின்னால் இருக்கும் யாழ் மருத்துவமனையில் காந்தி தேசத்தின் ராணுவம் செய்த படுகொலைகள் இவர் மனதை உறுத்தவில்லை. அதைவிட இவரின் அப்பா தர்மலிங்கத்தையும் இதே காந்தி தேசத்தின் உளவுப்படையே டெலோ இயக்கம்மூலம் கொலை செய்தது. அதுவும் இவருக்கு உறுத்தவில்லை. அத்துடன் இவரின் புளட் அமைப்பின் முன்னாள் தலைவரான உமா மகேஸ்வரனைக்கூட இதே காந்திதேசமே கொலை செய்வித்தது. அதுவும் இவருக்கு உறுத்தவில்லை. இப்பகூட இந்து மத கோவில்கள் இடிக்கப்பட்டு அதில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. அதைக்கூட இந்த காந்திதேச தூதுவர் கண்டுகொள்வதேயில்லை. எல்லாவற்றையும்விட கடந்த நான்கு வருடங்களாக காணாமல் போனவர்களின் உறவுகள் வீதியில் உட்கார்ந்து காந்திய வழியில் போராடுகின்றனர். அதையும் இந்த காந்தி தேச தூதுவர் கண்டுகொள்ளவேயில்லை. முக்கியமாக, இந்தியாவில் காந்திதேசத்தின் இப்போதைய பிரதமர் மோடி காந்தியை சுட்ட கோட்சேக்கு சிலை நிறுவி வணங்குகிறார். ஆனால் அந்த காந்தி தேசத்தின் தூதுவர் யாழ்ப்பாணத்தில் காந்தி சிலை நிறுவி நினைவு கூர்கிறார். ஏனெனில் இங்கு காந்தி சிலை என்;பது காந்தீயத்தின் மீதான அக்கறை அல்ல. மாறாக தமிழ் மக்கள் மீதான இந்திய ஆக்கிரமிப்பின் குறியீடு. சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரி ஒருவர் ஒரு பியர் போத்தலுக்காக நாட்டு ரகசியங்களை பாக்கிஸ்தான் அதிகாரிக்கு வழங்கியதாக வந்த செய்தியை படித்து கேவலம் ஒரு போத்தல் பியருக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்திருக்கிறாரே என சிரித்தேன். ஆனால் இப்போது நமது தலைவர்கள் கேவலம் ஒரு வடைக்காகவும் பிளேன் ரீக்காகவும் தமிழ் இனத்தை காட்டிக் கொடுப்பதை பார்க்கும்பொது சிரிக்க முடியவில்லை. வேதனையில் மனம் விம்முகிறது. இந்த கொடுமைக்கு எப்போது முடிவு வரும்?

No comments:

Post a Comment