Saturday, February 27, 2021

இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்?

•இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்? செய்தி - இலங்கை 73வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது. முப்படைகள் அணிவகுக்க பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார். ஒருபுறம் கொரோனோ பரவும் என்று தமிழ் மக்களின் பேரணிக்கு நீதிமன்றம் மூலம் தடை விதித்துவிட்டு மறுபுறத்தில் அணிவகுப்புடன் சுதந்திரதினம் கொண்டாடியுள்ளார் ஜனாதிபதி கோத்தா. ஒருபுறம் தமிழில் தேசியகீதம் பாட தடைவிதித்துவிட்டு மறுபுறத்தில் “ அனைத்து இனங்களும் சமமாக நடத்தப்படும்” என்றும் ஜனாதிபதி கோத்தா பேசியுள்ளார். சரி. பரவாயில்லை. என்னவாவது பேசிவிட்டு போகட்டும். ஆனால் புலிகளை அழித்தால் மக்கள் வாழ்வில் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றீர்களே? ஏன் இன்னும் ஓடவில்லை? புலிகளை அழித்து பத்து வருடமாகிவிட்டதே. ஏன் இன்னும் இவர்களுக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை? நல்ல உடை உணவு கிடைக்கவில்லை? இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேலாக வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தலைமீது எப்படி 58 பில்லியன் டாலர் கடன் வந்தது? இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 3 லட்சம் ரூபா கடனுடன் பிறக்கிறது என்கிறீர்களே, அப்படியென்றால் அந்த பணம் எல்லாம் எங்கே?

No comments:

Post a Comment