Saturday, February 27, 2021

நான்காவது நாளாக தொடரும் ஈருளிப் பயணம்!

நான்காவது நாளாக தொடரும் ஈருளிப் பயணம்! ஒருபுறம் கொரோனோ மறுபுறம் கடும் குளிர். ஆனாலும் இனப்படுகொலைக்கு நீதிகோரும் பயணம் தொடர்கிறது. கடந்த 40 வருடங்களில் இல்லாத குளிர் ஜரோப்பிய நாடுகளை வாட்டுகிறது. ஆனாலும் இவர்களின் பயணம் 22வது தடவையாக நிகழ்கிறது. இவர்கள் நீதி கோரும் போராட்டத்திற்காக உயிரை விடுவார்களேயொழிய போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். ஏனெனில் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை என்பதை மட்டுமல்ல போராட்டம் நிச்சயம் வெற்றி தரும் என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள். புலம் பெயர் தமிழர் பணம் அனுப்பி பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை பேரணியை நடத்தியதாக சிங்கள ராணுவ தளபதி கூறுகிறார். ஆனால் உண்மையில் புலம்பெயர் தமிழர்கள் அனுப்புவது பணம் இல்ல. இத்தகையவர்களின் உந்து சக்தியே தாயகத்தில் உள்ளவர்களை போராட வைக்கிறது.

No comments:

Post a Comment