Saturday, February 27, 2021

இவர்கள் கால்களை இழந்திருக்கலாம்.

இவர்கள் கால்களை இழந்திருக்கலாம். ஆனால் உணர்வுகளை இழக்கவில்லை. இவர்கள் கைகளை இழந்திருக்கலாம். ஆனால் தன்னம்பிகையை இழக்கவில்லை. அதனால்தான் இவர்கள் காத்திருந்து பேரணியில் பங்கேற்று தம் பங்கை வழங்கியிருக்கிறார்கள். “மக்கள் போராட விரும்பவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்தான் தூண்டுகிறார்கள்” என்று கூறியவர்களுக்கு தக்க பதிலை இவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அதுவும்; சிங்கக்கொடி ஏந்தி மகிந்தவுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற அந்த கை கால் நன்றாக உள்ளவர்களே உண்மையில் ஊனமானவர்கள் என்று இவர்கள் காட்டியிருக்கிறார்கள். மக்கள் போராட துணிந்துவிட்டால் ஓடும் விமானத்தைக்கூட கல்லால் எறிந்து விழுத்துவார்கள் என்று பிடல் காஸ்ரோ கூறினார். அவர் இத்தகைய மக்களின் உறுதியையும் உணர்வையையும் பார்த்தே அந்த வசனத்தை கூறியிருப்பார் என தோன்றுகிறது.

No comments:

Post a Comment