Saturday, February 27, 2021

பச்சைப் பொய்!

பச்சைப் பொய்! தமிழக சட்டசபைச் தேர்தல் வருகின்றது என்றவுடன் இந்திய பிரதமர் மோடியும் அவரது கட்சியும் ஈழத் தமிழர் மீது அக்கறை கொண்டவர்களாக காட்ட முயலுகின்றனர். அவர்கள் கூறிவரும் பொய்களில் ஒன்றே “ எங்களை இந்தியாவுடன் இணைத்து விடுங்கள் என தமிழ் எம்.பிகள் கோரிக்கை “ என்று கூறுவது. “இந்துக்களை முன்னிலைப்படுத்தி கட்சி உருவாக்குவதில் என்ன தவறு?” என்று பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கூட தமிழ் பகுதிகளை இந்தியாவுடன் இணையுங்கள் என்று கோரியதில்லை. பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழருக்கு கௌரவமான தீர்வு வேண்டும் என்றே தமிழ்தேசியகூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் நேற்று கூறியிருக்கிறார். ஆனால் நாட்டைப்பிரித்து இந்தியாவுடன் இணைக்குமாறு தமிழ் எம் பிக்கள் கோரியதாக கூறுகின்றனர் பாஜக கட்சியினர். இதை இவர்கள் ஈழத் தமிழரின் நலனுக்காக கூறவில்லை. மாறாக கோத்தபாயாவின் இனவாத தீ க்கு கொள்ளிக்கட்டை எடுத்துக் கொடுத்து உதவுகிறார்கள். அண்மையில் நடந்த பொத்துவிலில் இருந்து பொலிகண்டி பேரணியில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடியதை இந்திய உளவுப்படைகளால் சகித்தக்கொள்ள முடியவில்லை. எனவேதான் தமிழ் மக்களின் ஜக்கியத்தை குழப்பி கோத்தாவின் இனவாத அரசுக்கு உதவ இவ்வாறு சதிகள் மேற்கொள்கின்றன.

No comments:

Post a Comment