Saturday, February 27, 2021

கச்சதீவு இலங்கைக்கும் சொந்தமில்லை.

கச்சதீவு இலங்கைக்கும் சொந்தமில்லை. இந்தியாவுக்கும் சொந்தமில்லை. அது தமிழ் மக்களுக்கு சொந்தமானது. இலங்கை இந்தியா என்ற இரண்டு நாடுகளும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்ட்டது. ஆனால் அதற்கு முன்னரே கச்சதீவு ஈழத் தமிழர்களாலும் தமிழக தமிழர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் கருணாநிதி பணம் வாங்கிக்கொண்டு கச்சதீவை தாரை வார்த்துவிட்டதாக இப்போது சுப்பிரமணியசுவாமி கூறுவது ஆதாரமற்ற அவதூறு ஆகும். அதேபோன்று தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு கச்சதீவை மீட்க வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் இந்தியாவில் கூறுவதும் தவறாகும். ஏனெனில் கச்சதீவையும் தாண்டி பல மைல்கள் கடந்து முல்லைத்தீவு கடல்வரை தமிழக ரோலர் படகுகள் வருகின்றன. எனவே இங்கு கச்சதீவு பிரச்சனை இல்லை.

No comments:

Post a Comment