Saturday, February 27, 2021

தமிழக ஆளுநர் தண்டிக்கப்பட வேண்டும்

தமிழக ஆளுநர் தண்டிக்கப்பட வேண்டும் அற்புதம் அம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும் தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் 3 ஆண்டுகள் கழித்து இன்று நிராகரித்துள்ளார். அவர் தீர்;மானத்தை நிராகரித்ததுகூட பிரச்சனை இல்லை. ஆனால் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளது என்று கூறியிருப்பது எரிச்சலைத் தருகிறது. ஏனெனில் இதன்மூலம் அவர் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கூறிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்துள்ளார். அதுமட்டுமல்ல உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீர்மானம் நிறைவேற்றிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிக அரசை அவமதித்துள்ளார். எனவே நீதிமன்றத்தை தொடர்ந்து அவமதித்துவரும் தமிழக ஆளுநரை உச்சநீதிமன்றம் தண்டிக்க வேண்டும். தான் முன்பு வழங்கிய தீர்ப்பின்படி ஏழு தமிழரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கே உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் உச்சநீதிமன்றமே ஏழு தமிழரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும். இனியாவது அற்புதம் அம்மாளுக்கு நீதி கிடைக்க உச்சநீதிமன்றம் வழி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment