Saturday, February 27, 2021

இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரி நாளா?

•இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரி நாளா? இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக முதன்முதலில் 1956ல் அறிவித்தவர்கள் தமிழரசுக்கட்சியினரே. அதற்கமைய நடராஜா என்பவர் திருகோணமலை கச்சேரியில் பறந்த இலங்கை தேசியக் கொடியை அகற்றிவிட்டு கறுப்பு கொடியை ஏற்றினார். அப்போது இலங்கை பொலிஸ் அவரை சுட்டுக் கொன்றது. இன்று அவரது 65வது நினைவு தினம் ஆகும். கடந்த ஆட்சியில் இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுட்டிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரினார்கள். அப்போது தமிழரசுக்கட்சி எம்.பி யான சுமந்திரன் சுதந்திரதினத்தை கரிநாள் எனக் குறிப்பிடுவது தவறு என்றார். அதுமட்டுமல்ல தன் மனைவியுடன் சென்று இலங்கை அரசின் சுதந்திpரதின வைபவத்திலும் கலந்துகொண்டார். ஆனால் இம்முறை அதே சுமந்திரன் அந்த சுதந்திரநாளில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை பேரணி செல்கிறார். தமிழர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை அறிவதற்கு சுமந்திரனுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது குறிப்பு – தியாகி திருமலை நடராஜனை நினைவு கூர்வோம்.

No comments:

Post a Comment