Saturday, February 27, 2021

நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும்

நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான். சாதாரண டிராக்டர் வண்டியில் விவசாயிகள் வருகிறார்கள் என்றதும் அதைத் தடுக்க மோடி அரசு வீதியில் ஆணிகளை பதித்து தடுப்பு கட்டியது. உடனே விவசாயிகள் ஆணிகளை நசுக்கும் இரும்பு சில்லுகளை தமது டிராக்டர் வண்டியில் பொருத்தி தயாராகியுள்ளனர். எந்த மொழியில் அரசு பேசுகிறதோ அந்த மொழியில் விவசாயிகள் பதில் அளிப்பார்கள். விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் கவனமும் ஆதரவும் பெறத் தொடங்கிவிட்டது. எனவே அவர்கள் போராட்டம் வெல்வது உறுதி. அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment