Saturday, February 27, 2021

மக்கள் என்றும் மகத்தானவர்களே!

மக்கள் என்றும் மகத்தானவர்களே! கொட்டும் பனியில் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு இவர்கள் ஜெனிவாவுக்கு சென்றபோது தாயகத்தில் இருந்து வந்திருந்த தலைவர் ஒருவர் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறினார். இன்று அந்த தலைவரே கொட்டும் மழையில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை பேரணியில்; பங்கெடுத்து செல்கிறார். இந்த அதிசய மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் என்றும் மகத்தானவர்களே. தமிழ் மக்கள் நடத்தும் இப் போராட்டத்திற்கு அட்டாளச்சேனையில் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன் போராட்டம் நடத்தும் மக்கள் மலையக மக்களின் சம்பள உயர்வையும் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு போராட்டம் அனைத்து தமிழ்பேசும் மக்களையும் ஒன்றிணைப்பதைக் கண்டு சிங்கள அரசு அச்சமடைகிறது. ஆனால் போராட்டத்தைக்காட்டி புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்ற சிலர் “ போராட்டத்தினால் என்ன பயன்?” என்று இன்று நக்கலாக கேட்கிறார்கள். வெகுவிரைவில் தமிழ் மக்கள் இவர்களுக்கும் உரிய பதிலை வழங்குவார்கள்.

No comments:

Post a Comment