Saturday, February 27, 2021

பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை பேரணி

பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை பேரணி வெற்றிகரமாக முடிவுற்று 24 மணிநேரம்கூட ஆகவில்லை. அதற்குள் இன்னொரு முனையில் போராட்டத்தை திறந்துள்ளனர் தமிழ் மக்கள். எதிரியை ஓயவிடாமல் துரத்தி களைப்படைய வைப்பது. போன்று தொடர்ந்து பல முனையில் பல வடிவங்களில் போராடி இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர் தமிழ் மக்கள். இதோ கொட்டும் பனியில் நடுங்க வைக்கும் குளிரில் நீதி கோரி ஜெனிவா ஜ.நா நோக்கி ஈருளிப் பயணம் ஆரம்பித்துள்ளனர். ஒள்றல்ல, இரண்டல்ல தொடர்ந்து 22வது தடவையாக பயணம் செல்கின்றனர். இதன் மூலம் போராட்ட தீயை அணைந்துவிடாமல் பாதுகாத்து வருவதோடு அதனை முன்னகர்த்தும் உந்து சக்திகளாகவும் விளங்குகின்றனர். நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, சவிற்சலாந்து நாடுகள் ஊடாக ஜ.நா செல்கிறார்கள். வழியெங்கும் மக்களையும் மனித உரிமை அமைப்புகளையும் சந்தித்து இனப்படுகொலைக்கு நீதி கோருகின்றனர். மக்களை நம்பும், மக்களை சந்திக்கும் எந்த போராட்டமும் தோல்வி அடைவதில்லை. என்பதை இவர்களது போராட்டமும் நிச்சயம் நிரூபிக்கும்.

No comments:

Post a Comment