Saturday, February 27, 2021

அமிர்த்ஷாவுக்கு ஒரு வேண்டுகோள்!

அமிர்த்ஷாவுக்கு ஒரு வேண்டுகோள்! செய்தி - இலங்கையில் இருக்கும் இந்துக்களின் நலனுக்காக பாஜக வின் கிளை இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமிர்த்ஷா தெரிவித்துள்ளார். சரி. நல்லது. நீங்களும் உங்கள் பாஜக கட்சியும் உண்மையில் ஈழத்து இந்துக்களின் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் முதலில், •தமிழ்நாட்டில் 37 வருடமாக அகதியாக இருக்கும் இந்து ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்குங்கள் •தமிழ்நாட்டில் அகதியாக இருக்கும் இந்து ஈழத் தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை வழங்குங்கள் •தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்து ஈழ தமிழ் அகதிகளை உடனே விடுதலை செய்யுங்கள். •தாயகம் திரும்ப விருப்பமுள்ள ஈழ இந்து அகதிகளுக்கு கப்பல் சேவையை ஆரம்பி;த்து உதவுங்கள். இவற்;றை எல்லாம் செய்து காட்டிவிட்டு அப்புறம் தாராளமாக இலங்கை வாருங்கள். என்ன செய்தாலும் இந்திய அரசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் சில தமிழ் தலைவர்கள் இந்திய ஆளும் கட்சியையும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வர நினைக்கிறீர்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் வெறும்"Go back Modi" (மோடி திரும்பிப் போ) என்று சொல்லிவிட்டு பேசாமல் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். தேவையானால் சோனியா காந்தியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment