Monday, March 30, 2015

• பிப்-4, இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு

• பிப்-4, இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு
“இலங்கை மக்கள் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை கொண்டவர்கள்
தலைமைகளின் துரோகத்தால் தொடர்ந்தும் அடிமைகளாக இருக்கின்றனர்”
மன்னராட்சிக் காலத்தில் இந்திய மன்னர்கள் எவராலும் இலங்கை முழுவதையும் கைப்பற்றி தொடர்ந்து அட்சி செய்ய முடியவில்லை.
போத்துக்கேயராலும் முழு இலங்கையையும் கைப்பற்ற முடியவில்லை. அதுமட்டுமல்ல அவர்களால் 100 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்ய முடியவில்லை.
அதன்பின் வந்த ஒல்லாந்தர்களாலும் முழு இலங்கையை கைப்பற்ற முடியவில்லை. அவர்களாலும் 100 வருடங்களுக்கு மேல் ஆட்சி செலுத்த முடியவில்லை.
அதன்பின் வந்த ஆங்கிலேயர்களால் முழு இலங்கையை கைப்பற்ற முடிந்தாலும் அவர்களாலும் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியவில்லை. 1948ல் வேறு வழியின்றி; சுதந்திரம் வழங்கினார்கள்.
முழு இலங்கையையும் கைப்பற்றிய ஆங்கிலேயர்களால் இலங்கையை இந்தியாவுடன் சேர்த்து ஆட்சி செய்ய முடியவில்லை.
அதிக தூரத்தில் உள்ள அந்தமான் தீவையும், இலட்ச தீவுகளையும் இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்களால் அவற்றைவிட மிக அருகில் இருக்கும் இலங்கையை இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை.
அருகில் இருக்கும் சிக்கிம், பூட்டான் போன்ற நாடுகளை தனக்கு கீழே அடிமைப்படுத்தியிருப்பதுபோல் இன்றைய இந்திய அரசால் இலங்கையை ஆக்கிரமிக்க முடியவில்லை.
இந்தியாவிற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி ஏற்பட்டது. பங்களாதேசில் ராணுவ ஆட்சி எற்பட்டது. ஆனால் இலங்கையில் ஒருபோதும் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை.
ஆம். இலங்கை ஒரு சிறிய தீவு. சுமார் இரண்டு கோடி மக்களே அங்கு உள்ளனர். ஆனால் அவர்கள் சுதந்திர உணர்வு மிக்கவர்கள். வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள்.
1948 ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை 3 ஆயுதப் போராட்டங்களை அது சந்தித்துவிட்டது. இதுவரை சுமார் 3லட்சம் மக்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டாலும் மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.
ஆம். இலங்கை மக்கள் பெருமைக்குரியவர்களே!
அவர்கள் மிக விரைவில் தமது அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment