Monday, March 30, 2015

ஜெசிக்காவுக்காக வாக்கு போட்டவர்கள் விபுசிகாவிற்காக குரல் கொடுப்பார்களா?

• ஜெசிக்காவுக்காக வாக்கு போட்டவர்கள்
விபுசிகாவிற்காக குரல் கொடுப்பார்களா?
விஜய் டிவி பாட்டுப்போட்டியில் ஜெசிக்காவின் வெற்றிக்காக உழைத்த புலம்பெயர் தமிழர்கள் அதே உணர்வுடன் சிறுமி விபுசிகாவுக்காகவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
யாருமற்ற அந்த சிறுமி விபுசிகா மீண்டும் தன் தாயாருடன் சேர்ந்து வாழ அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
பல நாட்களாக எந்த வித வழக்கும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விபுசிகாவின் தாயார் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
விபுசிகாவின் தாயார் மட்டுமல்ல அடைத்து வைக்கப்ட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
இதற்காக தமிழ் மக்கள அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
• சிராணிக்கு மீண்டும் தலைமை நீதிபதி பதவியை அளித்த அரசு
பதவி நீக்கப்ட்ட தளபதிகளுக்கு மீண்டும் பதவி வழங்கிய அரசு
சிறையில் உள்ள தமிழர்களை மட்டும் விடுதலை செய்ய மறுக்கிறது!
• அலரி மாளிகையில் பணத்தைக் கண்டு பிடித்தவர்களுக்கு
மறைத்து வைக்கப்பட்டிருந்த விமானத்தை கண்டு பிடித்தவர்களுக்கு
மகிந்தவின் விலையுயர்ந்த வாகனத்தைக் கண்டு பிடித்தவர்களுக்கு
கோத்தபாயாவின் ஆயுதக் களஞ்சியத்தை கண்டு பிடித்தவர்களுக்கு
நாமல் ராஜபக்சவின் விலையுயர்ந்த கடிகாரங்களை கண்டு பிடித்தவர்களுக்கு
தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லையா?
• மகிந்தவின் இனவாத பாதையிலேயே மைத்திரியும் செல்கிறார்.
இந்தியா எப்போதும் இலங்கை அரசை ஆதரிக்கிறது.
இவர்களை எல்லாம் நம்பி தமிழினம் அழிகிறது!

No comments:

Post a Comment