Monday, March 30, 2015

சிறப்பு முகாமில் பாலியல் கொடுமைகள்!

• சிறப்பு முகாமில் பாலியல் கொடுமைகள்!
(மனட்சாட்சி உள்ள தமிழர்கள் மட்டும் படிக்கவும்)
அமெரிக்காவின் குவாண்டபே முகாமில் சித்திரவதைகள் நடைபெறுவது யாவரும் அறிந்ததே.
ஆனால் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் சித்திரவதைகளுடன் பாலியல் கொடுமைகளும் நடக்கிறது.
தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்த ஈழ தமிழ் பெண்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதுடன் அவர்களை காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்ல நிர்வாக துறை அதிகாரிகளும் பாலியல் வல்லுறவு செய்கின்றனர்.
“ஈழத்தாய்” என அழைக்கப்படும் ஜெயா அம்மையார் ஆட்சியில் ஈழ தமிழ் பெண்கள் தமிழ் அதிகாரிகளால் பாலியல் வல்லுறவு செய்யப்படுவது கொடுமையானது.
ஈழத்தில் ராஜபக்சே ராணுவம் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது குறித்து பொங்கி எழுந்த தமிழக அரசியல்வாதிகள் தமது மண்ணில் தமது கண் முன்னே ஈழ பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவது குறித்து மௌனமாக இருப்பது ஏன்?
அதிகாரிகள் தவறு இழைக்கின்றார்கள். அதற்கு தமிழ்நாடு அரசு உடந்தையாக இருக்கிறது. இது குறித்து தமிழக அரசியல்வாதிகள் மட்டுமன்றி பத்திரிகைகள்கூட கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
உலகிலேயே மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளவர்கள் தமிழ்நாட்டை நம்பிப்போன ஈழ அகதிப் பெண்களே!
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு அகதிப் பெண்களை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து பாலியல் வல்லுறவு செய்யும்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை படிக்கவும்.

No comments:

Post a Comment