Monday, March 30, 2015

• லண்டனில் நடைபெற்ற 6 கவிதை தொகுப்புகளின் மதிப்புரை நிகழ்வு

• லண்டனில் நடைபெற்ற 6 கவிதை தொகுப்புகளின் மதிப்புரை நிகழ்வு
லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் நேற்றைய தினம் ( 01.03.2015) மாலை 4 மணியளவில் ஈழத்து தமிழ் பெண் கவிஞர்களின் ஆறு கவிதை தொகுப்புகள் பற்றிய மதிப்புரையும் கருத்து பகிர்வுகளும் “தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம்” சார்பாக இடம் பெற்றன.
• “கருநாவு” – ஆழியாள் (அவுஸ்ரேலியா)
• “இன்னும் வராத சேதி” – ஊர்வசி (இலங்கை)
• “பெருங்கடல் போடுகிறேன்”- அனார் (இலங்கை)
• “எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை” – ஒளவை (கனடா)
• “நீத்தார் பாடல்” – கற்பகம் யசோதரா (கனடா)
• “ஒவ்வா” - ஸார்மிளா செய்யத் (இலங்கை)
தலைமை தாங்கவிருந்த மாதவி சிவலீலன் தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை. அதனால் பௌசர் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
சந்திரா ரவீந்திரன் மற்றும் கோகுலரூபன் ஆகியோர் மேற்கண்ட ஆறு கவிதை தொகுப்புகள் குறித்த தங்கள் மதிப்புரைகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து இறுதியாக சமூகமளிந்திருந்த பார்வையாளர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
அவதானிப்பு :
(1) மார்ச் -8ம் தேதி சர்வதேச மகிளிர் தினம் வருகிறது. மார்ச் முதலாம் திகதி நடைபெற்ற இந்த பெண் கவிஞர்களின் தொகுப்பு நிகழ்வு அதற்கு முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது.
(2) கடந்த மாதமளவில் “எழுநா” சார்பாக10 நூல்களின் வெளியீட்டு விழா லண்டனில் நடைபெற்றது. தற்போது ஆறு பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பு மதிப்புரையும் கருத்து பகிர்வும் நடைபெற்றுள்ளது. இவை தமிழ் இலக்கியம் குறித்த ஆரோக்கியமான நம்பிக்கையளிக்கும் நகர்வை காட்டுகிறது.
(3) பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இவ்வாறான இலக்கிய நிகழ்வை உணர்வுடன் நடத்துவோரும் அதில் பங்களிப்போரும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
(4) நண்பர் கிருஸ்ணராஜா அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இங்கு பயன்படுத்தியுள்ளேன். அவருக்கு நன்றிகள்.

No comments:

Post a Comment