Monday, March 30, 2015

• கலைஞர் மகள் கனிமொழி பதில் தருவாரா?

• கலைஞர் மகள் கனிமொழி பதில் தருவாரா?
வடமாகாணசபை உறுப்பினர் ஆனந்தி அவர்கள்
கலைஞர் மகள் கனிமொழியின் ஏற்பாட்டிலேயே
தனது கணவர் உட்பட பல புலி உறுப்பினர்கள்
இலங்கை அரசிடம் சரணடைந்ததாக கூறியுள்ளார்.
அவ்வாறு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த
நடேசன் உட்பட அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அப்படியாயின் கலைஞர் மகள் கனிமொழி
போராளிகள் கொல்லப்படுவதற்கு துணை போனாரா?
இது குறித்து கனிமொழி பதில் தருவாரா?
அல்லது தமிழீழத்திற்காக “டெசோ” நடத்தும்
கலைஞர் கருணாநிதியாவது பதில் தருவாரா?
தமிழின தலைவர் என தன்னை கூறிக்கொள்பவர்
தமது பதவி மற்றும் குடும்ப நலனுக்காக
தமிழின படுகொலைக்கு துணை போனாரா?
ஈழத் தமிழர்களால் இவர்களின் துரோகம்
மறக்கத்தான் முடியுமா? அல்லது
மன்னிக்கத்தான் முடியுமா?

No comments:

Post a Comment