Monday, March 30, 2015

• இலங்கை அரசே! முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் தோழர் குமார் குணரட்ணத்தை வெளியேற்றாதே!

• இலங்கை அரசே!
முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் தோழர் குமார் குணரட்ணத்தை வெளியேற்றாதே!
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்திருக்கும் தோழர் குமார் குணரட்ணத்தை வெளியேற்றுவதற்கு இலங்கை அரசு முயற்சி செய்கிறது.
ஓரு புறத்தில் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம் என அறைகூவல் விடும் புதிய மைத்திரி அரசானது, இன்னொரு புறத்தில் வந்திருக்கும் குமார் குணரட்னத்தை வெளியேறும்படி கூறுகிறது.
இது ஒரு அரசியல் பழி வாங்கலாகும். இது மைத்திரி அரசின் இரட்டை வேடத்தைஅம்பலப்படுத்துவதாகவே இருக்கிறது.
மாணவர்களை கொலை செய்ய உத்தரவிட்ட மகிந்த மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் கோத்பாயா மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டு தப்பியோடிய பசில் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ரஸ்சியாவில் இருந்து அழகிகளை இறக்குமதி செய்து சொகுசு பஸ்சில் உல்லாசம் அனுபவித்த மகிந்த புதல்வர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால்,
1988ல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் புரிந்த தோழர் குமார் குணரட்னம் மீது
1989ல் இலங்கை ராணுவத்திடம் தனது சகோதரனை பறி கொடுத்த குமார் குணரட்னம் மீது
ஜே.வி.பி இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகித்த குமார் குணரட்னம் மீது
இன்று முன்னிலை சோசலிசக்கட்சியின் தலைவராக உள்ள தோழர் குமார் குணரட்னம் மீது
இத்தகைய நீண்ட அரசியல் வரலாற்றை கொண்டிருக்கும் தோழர் குமார் குணரட்னம் மீது
இலங்கை அரசு அவசரம் அவசரமாக நடவடிக்கை எடுப்பது ஏன்?
மகிந்தவும், மைத்திரியும் ஒரே ஆளும் வர்க்கம். ஆனால் தோழர் குமார் குணரட்னம் பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் கொடுப்பதுதான் காரணமா?
அல்லது, தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சமவுரிமை உண்டு என்று இன ஜக்கியத்திற்காக தோழர் குமார் குணரட்ணம் பாடுபடுவது தான் காரணமா?
அல்லது, சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தோழர் குமார் குணரட்ணம் கோருவதுதான் காரணமா?
தேர்தல் காலத்தில் தோழர் குமார் குணரட்ணத்தின் “முன்னிலை சோசலிசக்கட்சி” குறிப்பிட்டது போன்று மகிந்த போய் மைத்திரி வந்திருப்பது வெறும் முக மாற்றமே.
மாறாக, அமைப்பு மாற்றமே இலங்கையின் அனைத்து பிரச்சனைகளும் தீர்வாக அமையும். இதனை புதிய மைத்திரி அரசின் நடவடிக்கைகள் நன்கு உறுதிப் படுத்துகின்றன.

No comments:

Post a Comment