Monday, March 30, 2015

• புலிகளுக்கு ஒரு நியாயம். தலிபான்களுக்கு இன்னொரு நியாயம். இதுதான் அமெரிக்க நியாயமா?

• புலிகளுக்கு ஒரு நியாயம்.
தலிபான்களுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் அமெரிக்க நியாயமா?
செய்தி- ஆப்கான் தலிபான்கள் தீவிரவாதிகள் அல்ல- அமெரிக்கா அறிவிப்பு
• அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு தலிபான் காரணம் என்று கூறி தலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. தலிபான்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது.
ஆனால் புலிகள் அமெரிக்கா மீது ஒருபோதும் தாக்குதல் செய்யவில்லை. இருந்தும் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அமெரிக்கா தடை செய்தது.
• தலிபான்கள் பல அமெரிக்க போர் வீரர்களை கொன்றார்கள். குண்டு தாக்குதல் மேற்கொண்டார்கள். இருந்தும் தலிபான்கள் தீவிரவாதிகள் அல்ல என்று அமெரிக்கா அறிவிக்கிறது.
ஆனால் புலிகள் எந்தவொரு அமெரிக்க வீரரையும் கொல்லவில்லை. மாறாக தாம் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்துள்ளார்கள். இருந்தும் புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறி அவர்கள் மீதான தடையை அமெரிக்கா நீடிக்கிறது.
• தலிபான்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் மத அடிப்படைவாத கொள்கைகள் பின்பற்றப்படும் என்கிறார்கள். ஆனால் புலிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் சந்தைப் பொருளாதாரக் கொள்கையே பின்பற்றப்படும் என்றார்கள்.
இருந்தும் தலிபான்களை தீவிரவாதிகள் அல்ல என்று கூறும் அமெரிக்கா புலிகளை இன்றும் பயங்கரவாதிகள் என்றே கூறுகிறது.
• புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி தடைசெய்த அமெரிக்கா
புலிகளையும் மக்களையும் அழிக்க இலங்கை அரசுக்கு உதவிய அமெரிக்கா
இன்றும் புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா
ஜ.நா வில் இலங்கை அரசுக்கு தண்டனை பெற்று தரும் என்று நம்ப முடியுமா?
• கசாப்புக் கடைகாரனிடம் கருணையை எதிர்பாhக்கும் செம்மறியாட்டின் அறியாமையைவிட மோசமான முட்டாள்தனமானது அமெரிக்காவிடம் தமிழர்கள் நீதியை எதிர்பார்ப்பது!
“அமெரிக்கா கப்பல் அனுப்பும், காத்திருங்கள்” என்று புலிகளை ஏமாற்றிய வியாபாரிகள் ,தற்போது “அமெரிக்கா நீதி பெற்று தரும், ஜ.நா வுக்கு படை எடுங்கள்” என்று தமிழ் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்கள்.
• அமெரிக்காவை நம்பும்படி கூறுபவர்கள் அமெரிக்காவை விட ஆபத்தானவர்கள்.
இதை தமிழ் மக்கள முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment