Monday, March 30, 2015

தமிழர் நலன் கருதியே சுதந்திரதின நிகழ்வில் பங்கு பற்றினோம்- சம்பந்தர் தெரிவிப்பு

 தமிழர் நலன் கருதியே சுதந்திரதின நிகழ்வில் பங்கு பற்றினோம்- சம்பந்தர் தெரிவிப்பு
ரனிலுடன் சேர்ந்து சிங்க கொடி ஏந்தியதும் தமிழர் நலனுக்காகவே!
மகிந்தவுடன் சேர்ந்து விருந்துண்டதும் தமிழர் நலனுக்காகவே!
சந்திரிக்காவிற்கு ஆமாம் போட்டதும் தமிழர் நலனுக்காகவே!
மைத்திரியின் சுதந்திரதின நிகழ்வில் பங்கு பற்றியதும் தமிழர் நலனுக்காகவே!
இந்திய தூதர விருந்துகளில் தண்ணியடிப்பதும் தமிழர் நலனுக்காகவே!
வாரா வாரம் இந்தியாவுக்கு படையெடுப்பதும் தமிழர் நலனுக்காகவே!
சம்பந்தரும் அவரது பரிவாரங்களும் எது செய்தாலும் அது தமிழர் நலன்களுக்காகவே?
இங்கு தமிழர் நலன் என்று அவர்கள் சொல்வது தமது நலன்களையே!
தமது நலன்களுக்காக தமிழ் இனத்தை மட்டுமல்ல
எதையும் காட்டிக்கொடுக்க அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.
சிறையில் உள்ளவர்களின் விடுதலையைக்கூட கோராதவர்கள்
தமிழர் நலன்களுக்காக பாடுபடுகிறார்கள் என்றால்
அதை நம்புவதற்கு தமிழ் மக்கள் என்ன கேனையர்களா?
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்றால் கூட நம்பலாம்.
ஆனால், இந்த சம்பந்தர் கும்பல் தமிழர் நலன்களுக்காக பாடுபடுகிறது என்றால்
ஒரு அப்பாவி குழந்தை கூட நம்பாது!

No comments:

Post a Comment