Monday, March 30, 2015

மதப் பயங்கரவாதிகளுக்கு ஒரு நியாயம் தமிழ் இனப் போராளிகளுக்கு இன்னொரு நியாயம். இதுதான் ஜெயா அம்மையாரின் தமிழக காவல்துறையின் நியாயம் ??

• மதப் பயங்கரவாதிகளுக்கு ஒரு நியாயம்
தமிழ் இனப் போராளிகளுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் ஜெயா அம்மையாரின் தமிழக காவல்துறையின் நியாயம் ???
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தாங்கள் வீசியது வெடிகுண்டுதான் என்கிறார்கள இந்துமதப் பயங்கரவாதிகள். ஆனால் ஜெயா அம்மையாரின் தமிழக காவல்துறையோ வீசப்பட்டது வெறும் பட்டாசு என்கிறது.
தமிழ் இன உணர்வாளர்களை பொய்வழக்கில் கைது செய்வது மட்டுமன்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கும் ஜெயா அம்மையாரின் தமிழக அரசு இந்து மதப் பயங்கரவாதிகளை எந்த வழக்கும் இன்றி காப்பாற்ற முயற்சி செய்கிறது.
மதுரையில் கைது செய்யப்பட்ட தமிழ் இன போராளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மதுரை சிறையில் 365 நாட்களுக்கு மேலாக வாடுகிறார்கள். ஆனால் சமூகத்திற்கு பெருங்கேடு விளைவிக்கும் மதப் பயங்கரவாதிகள் உல்லாசமாக உலா வருகிறார்கள்.
தமிழ் இன போராளிகள் தமிழ் இன மக்கள் விடுதலை பெற வேண்டும் என கோருவது தவறா?
தமிழ் இனம் விடுதலை பெற வேண்டும் என கோருவது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட வேண்டிய குற்றமா?
தமிழ்நாட்டில் தமிழன் விடுதலை பெற வேண்டும் என விரும்புவர்கள் தமிழ்நாடு அரசால் தமிழக சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால் தமிழ் இனத்தை அழிக்கும் மதப் பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.
தமிழக மக்கள் தமது அடிமைத்தனத்தை உணராதவரை
தமிழக மக்கள் தமது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களுக்கு செய்யும் உதவி என்பதை உணராதவரை
தமிழக மக்களும் ஈழத் தமிழர்களும் சேர்ந்து இந்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை உணராதவரை
எந்த தமிழனும் விடுதலை பெற முடியாது என்பதே உண்மை.

No comments:

Post a Comment