Monday, March 30, 2015

• ஜனாதிபதி மைத்திரி தமிழில் பேச வேண்டும்- மாவை சேனாதிராசா வேண்டுகோள்

• ஜனாதிபதி மைத்திரி தமிழில் பேச வேண்டும்- மாவை சேனாதிராசா வேண்டுகோள்
இந்த ஆள் உண்மையில் லூசா அல்லது
லூசு போல் நடிக்கிறாரா?
தமிழில் பேசினால் தமிழ் மக்கள் நம்பிவிடுவார்களா? அல்லது
தமிழில் பேசினால் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடுமா?
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தமிழில் பேசி
தமிழ் இனத்தை அழித்ததை இவர் மறந்து விட்டாரா?
26ஆயிரம் தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுகிறார்கள்
அவர்களை விடுதலை செய்யுமாறு இவர் கோரவில்லை
பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்
அவர்களை மீள் குடியேற்றுமாறு இவர் கோரவில்லை
குறைந்தது சுன்னாகம் தண்ணீர் பிரச்சனையாவது
தீர்க்குமாறு ஜனதிபதியிடம் கோரியிருக்கலாம்.
அதையெல்லாம் விடுத்து தமிழில் பேசுமாறு கோருவது
சுத்த பையித்தியக்காரத்தனமாகும்
அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு
நிச்சயம் சரியான பாடம் புகட்டுவார்கள்

No comments:

Post a Comment