Monday, March 30, 2015

• தொடரும் சிறப்புமுகாம் கொடுமைகள்!

• தொடரும் சிறப்புமுகாம் கொடுமைகள்!
கலைஞரும், ஜெயா அம்மையாரும் தங்களுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக புலிகளால் தமக்கு ஆபத்து என்கிறார்கள்.
கறுப்பு பூனை பாதுகாப்பு தொடர்ந்து பெறுவதற்காக அவர்கள் புலிகள் அமைப்பை தடை செய்து வருகிறார்கள்.
புலிகள் அமைப்பை தடைசெய்வதற்காக தமிழ்நாட்டில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக பொய் கூறுகிறார்கள்.
புலிகள் நடமாட்டம் இருப்பதாக காட்டுவதற்காக அப்பாவி அகதிகள் மீது புலிகள் முத்திரை குத்துகிறார்கள்.
புலிகள் முத்திரை குத்தப்பட்ட அப்பாவி அகதிகளை அடைப்பதற்காக சிறப்பு முகாம்களை இயக்குகிறார்கள்.
கலைஞர், ஜெயா அம்மையார் கறுப்பு பூனை பாதுகாப்பு பெறுவதற்காக அப்பாவி அகதிகள் சிறப்புமுகாமில் வாடுகின்றார்கள்.
“சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் புலிகள் அல்ல . அப்பாவி அகதிகள்” என்று முன்னாள் காவல்துறை தலைவர் வைகுந் அவர்களே கூறியிருக்கிறார்.
அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் அப்பாவி ஈழ அகதிகள் மட்டுமல்ல தாயகம் திரும்பிய தமிழர்களும் சட்டவிரோதமாக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பதை இரா.சிவலிங்கம் கூறுகிறார்.
திருச்சியை சேர்ந்த தமிழரை தவறுதலாக சிறப்புமுகாமில் அடைத்தமைக்காக செங்கல்பட்டு தாசில்தார் உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
சிறப்புமுகாம் குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக்கமிசன் நீதிபதி சிங்கரவேலு கூட மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மைக்காக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகையை கொடிய சிறப்புமுகாம் இனியாவது மூடப்படுமா?
அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?
மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் கட்டுரையை வாசிக்கவும்.
http://tholarbalan.blogspot.co.uk/2015/03/part-2.html

No comments:

Post a Comment