Monday, March 30, 2015

• நம்ம தமிழக முதல்வர் பன்னீருக்கு ஒரு “ஓ” போடுவோம்!

• நம்ம தமிழக முதல்வர் பன்னீருக்கு ஒரு “ஓ” போடுவோம்!
செய்தி - ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப துடிக்கிறார் கருணாநிதி- தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
நம்ம ஆம்பள சிங்கம் பன்னீருக்கு தமிழகத்தில் ஈழ அகதிகள் இருப்பதுகூட தெரிந்திருக்கிறது.
அதிசயம். ஆனால் உண்மை. நம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.
அவர் ஈழ அகதிகள் மீது அக்கறை கொண்டு கருணாநிதியையே அறிக்கையால் விளாசியிருக்கிறார்.
நம்பிவிட்டோம். நம்பிவிட்டோம். முதல்வர் பன்னீர் அவர்களே!
நீங்கள் உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போன்று கலைஞர் அரசும் சோனியா அரசும்தான் எமது தமிழ் இன அழிவுக்கு துணை போனது என்பது உண்மையே.
ஆனால் உங்கள் தலைவி “ஊழல் ராணி” ஜெயா அம்மையார் ஆட்சியிலும்,
இன்று உங்கள் ஆட்சியிலும் சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?
சிறப்புமுகாமில் உள்ள அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் நீங்கள் அகதிகள் விடயம் தொடர்பாக கருணாநிதியை குற்றம் சாட்ட என்ன தார்மீக தகுதி இருக்கு?
போதும்! உங்கள் அரசியல் லாபங்களுக்காக இனியும் ஈழத் தமிழர்களை பலிக்கடா ஆக்காதீர்கள்.
உங்களால் ஈழத் தமிழர்களை வாழவைக்காவிடினும் பரவாயில்லை.
ஆனால் அவர்களை அழிக்க துணை போகாதீர்கள்.

No comments:

Post a Comment