Monday, March 30, 2015

• சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?

• சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?
தமிழ் மக்கள் தலைமை நீதிபதி பதவி கோரவில்லை. ஆனால் தமிழர் ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் ஆளுநர் பதவி கோரவில்லை. ஆனால் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கள் அமைச்சர் பதவி கோரவில்லை. ஆனால் தமிழர்கள் சிலர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ் மக்கள் கோருவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே! ஆனால் அது இன்னும் ஏன் நடைபெறவில்லை?
இந்த சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.
இனியும் அவர்களை விடுதலை செய்ய தாமதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி ஒரு தமிழர். அவராவது கைதிகளை விடுதலை செய்ய முன்வராவிடினும் அவர்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காவது முன்வரவேண்டும்.
ஒருவர் மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையைவிட அதிக காலத்தை சிறையில் கழித்துவிட்டபோதும் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லையாயின் என்ன அர்த்தம்?
அது தாமதிக்கப்பட்ட நீதி அல்லவா?
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.

No comments:

Post a Comment