Monday, March 30, 2015

• லண்டனில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

• லண்டனில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
லண்டனில் உள்ள இலங்கை தூதரலாயத்திற்கு முன்னால் இன்று (07.02.2015) மதியம் 1மணியளவில் முன்னிலை சோசலிசக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மூவின மக்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் சிங்களம,; தமிழ் மற்றும் ஆங்கில மும்மொழிகளில் இலங்கை அரசுக்கு எதிராக கோசம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சேனக்க கெட்டியராச்சி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அடுத்து பௌசர் தமிழில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து டிசா சிங்களத்தில் உரையாற்றினார்.
நேற்று பிரான்ஸ் பாரிசில் இதே போன்ற ஆர்ப்பாட்டம் முன்னிலை சோசலிசக் கட்சி சார்பில் நடைபெற்றது.
இலங்கையிலும் நாட்டின் பல பாகங்களில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
லண்டனில் கடும் குளிருக்கு மத்தியிலும் மூவின மக்களும் இலங்கை அரசின் ஜனநாயக மறுப்புக்கு எதிராக ஒன்று திரண்டு குரல் கொடுத்திருப்பது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment