Monday, March 30, 2015

கலைஞருக்கு மகிழ்ச்சி கொடுத்த தேர்தல் முடிவு!

• கலைஞருக்கு மகிழ்ச்சி கொடுத்த தேர்தல் முடிவு!
தி.மு.க வேட்பாளர் 1 லட்சம் வோட்டால் தோல்வி பெற்றுள்ளார்.
இருப்பினும் கலைஞர் கருணாநிதி மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
66 கோடி ரூபா மக்கள் பணத்தை சுருட்டிய ஜெயா அம்மையாருக்கு
நீதிமன்றம் நாலு வருட சிறைத் தண்டனை அளித்தது.
60 ஆயிரம் கோடி ஊழல் செய்த தன் மகள் கனிமொழிக்கு
எத்தனை வருடம் சிறைத் தண்டனை கிடைக்குமோ என
கலைஞர் கணக்கு பார்த்த வண்ணம் இருந்தார்.
ஜெயா அம்மையாரின் வேட்பாளர்
தலைக்கு 5 ஆயிரம் கொடுத்து
இடைத் தேர்தல் வெற்றியை பெற்று விட்டார்.
கலைஞர் வேட்பாளர் 1 லட்சத்தால் தோல்வியுற்றாலும்
எதிர் காலத்தில் கனிமொழி தண்டனை பெற்றாலும்
தி.மு.க வும் பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெறலாம்
என்ற நம்பிக்கையை கலைஞருக்கு கொடுத்துள்ளது.
ஜெயா அம்மையாரின் வெற்றி
கலைஞருக்கு கிடைத்த நம்பிக்கை!
ஆனால் இது தமிழனுக்கு கிடைத்த அவமானம்
தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட தலைகுனிவு!

No comments:

Post a Comment