Monday, March 30, 2015

ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஒரு கம்யுனிஸ்ட்டா?

ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஒரு கம்யுனிஸ்ட்டா?
ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஒரு மாவோயிஸ்ட் என்றும்
அவர் தோழர் சணமுகதாசனை தலைவராக கொண்டவர் என்றும்
அதனாலேயே ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்தவர் என்றும்
இன்றும்கூட வீட்டில் மாக்ஸ், மாசேதுங் படங்களை வைத்திருக்கின்றார்
என்றும் சிலர் தற்போது கூறி வருகிறார்கள்.
ஆனால் தோழர் சண்முகதாசன் “ இலங்கை அரசும் சிங்கள பேரினவாதிகளும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் எற்க மறுக்கின்றமையே இன நெருக்கடிக்கு தீர்வு காணமுடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்த உரிமை ஏற்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டாலொழிய தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எதுவுமே இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
• தலைவர் சண்முகதாசன் கூறியதை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா?
• தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை “மாவோயிஸ்ட” மைத்திரி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா?
• தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை வீட்டில் கால்மாக்ஸ் படம் வைத்திருக்கும் மைத்திரி அவர்கள் ஏற்றுக்கொள்வாரா?
• ஜனாதிபதி மைத்திரி பதில் அளிக்காவிட்டாலும் அவருக்கு கம்யுனிச வேசம் போட முனைபவர்களாவது பதில் தருவார்களா?
இனப் படுகொலையில் பங்கெடுத்த ஒருவரை
இராணுவத்தை விலக்க மறுக்கும் ஒருவரை
ஆக்கிரமித்த நிலத்தை தர மறுக்கும் ஒருவரை
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய மறுக்கும் ஒருவரை
இந்தியாவின் கூட்டாளியாக செயற்படும் ஒருவரை
மாவோயிஸ்ட் என்றோ கம்யுனிஸ்ட் என்றோ கூறுவது
மாசேதுங்கையும் கம்யுனிசத்தையும் அசிங்கப்படுத்துவதாகவே இருக்கும்!

No comments:

Post a Comment