Friday, October 30, 2015

கோவையில் 16.10.15 யன்று எனது நூல் வெளியீடு

• கோவையில் 16.10.15 யன்று எனது நூல் வெளியீடு
கடந்த 21.09.15 யன்று சென்னையில் எனது "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் தமிழ்தேச மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்டது.
எதிர்வரும் 16.10.15யன்று மாலை 5 மணிக்கு கோவையில் அண்ணாமலை அரங்கத்தில் எனது இந் நூல் தமிழ்தேச மாணவர் இயக்கத்தால் வெளியிடப்படவுள்ளது.
நூல் வெளியீட்டு நிகழ்வு விபரம்
தலைமை- தோழர் இளங்கோவன்
வரவேற்புரை- தோழர் தமிழ்நெறியன்
நூல்வெளியீடு- தோழர் வே.ஈஸ்வரன்
நூல் பெறுதல்- தோழர் கொளத்தூர் மணி
நூல் பெற்று உரை-
தோழர் கோவை கு.இராமகிருட்டிணன்
வழக்கறிஞர் ப.பா.மோகன்
எழுத்தாளர் பாமரன்
வெ.மா.வீரக்குமார்
வழக்கறிஞர் வெண்மணி
வழக்கறிஞர் பா.புகழேந்தி
தோழர் தமிழ்நேயன்
வழக்கறிஞர் கலையரசு
நன்றியுரை- தோழர் வே.சிவபாலன்
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
எனவே சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த செய்திகள் தமிழக மக்களுக்கு அறியும் வண்ணம் அதிகம் கொண்டுசெல்ல வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் தமிழக உறவுகளை பாராட்டுவதோடு அவர்களது இம் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment