Friday, October 30, 2015

• தலித்துகளின் சேலை உரியும்போது கண்ணன் வரமாட்டானா?

• தலித்துகளின் சேலை உரியும்போது கண்ணன் வரமாட்டானா?
துச்சாதனனால் பாஞ்சாலியின் சேலை உரியப்பட்டபோது கண்ணன் ஓடிவந்து அவள் மானம் காத்ததாக பாரத கதை கூறுகிறது.
இன்றைய நவ பாரத நாட்டில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் சேலை உரியப்படும்போது அந்த கண்ணன் ஏன் வரவில்லை?
பாஞ்சாலிக்கு ஆபத்து என்றவுடன் ஓடி வந்த கண்ணன் இன்று தலித் பெண்களுக்கு வராமல் இருப்பது ஏன்?
தலித் மக்கள் என்றால் கடவுள் கண்ணனுக்கும் பிடிக்காதா? அல்லது
தலித்துகள் காப்பாற்றப்பட வேண்டிய மனிதர்கள் இல்லை என்று கடவுள் நினைக்கிறாரா?
கண்ணன் வர மாட்டான்.
கண்ணன் தலித்துகளை காப்பாற்ற மாட்டான்.
தலித்துகள் அடிக்கு அடி கொடுக்க வேண்டும்.
அப்போது படிப்பினை வேறுவிதமாக அமையும்.
ஏய் இந்தியாவே!
நிர்வாணமாக்கப்பட்டிருப்பது யாரோ இரு தலித்துகள் அல்ல. மாறாக நிர்வாணமாக்கப்பட்டிருப்பது இந்தியதேசம் என்பதை புரிந்துகொள்.

No comments:

Post a Comment