Friday, October 30, 2015

• லண்டனில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான பிறந்தநாள் விழா

• லண்டனில் நடைபெற்ற ஒரு வித்தியாசமான பிறந்தநாள் விழா
லண்டனில் வாழும் ஈழத் தமிழரான சிறீகாந்தலிங்கம் என்ற வழக்கறிஞர் தனது 60வது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.
கடந்த 02.10.15 யன்று லண்டன் ஆச்வே முருகன் ஆலயத்தில் இந்த பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது.
விழா மண்டபத்தின் நடுவில் உண்டியல் வைக்கப்பட்டு அன்பளிப்புகள் யாவும் பணமாக பெறப்பட்டுள்ளது.
உண்டியல் மூலம் பெறப்பட்ட அப் பணம் யாவும் வன்னியில் உள்ள வறிய மக்களுக்காக செலவு செய்யப்படவுள்ளது.
அதுமட்டுமன்றி "லண்டனில் உள்ளவர்கள் ஆடம்பரமாக விழாக்கள் நடத்துவது சரியா?" என வழக்காடு மன்றம் நடத்தப்பட்டது.
சிறீகாந்தலிங்கம் அவர்கள் தன்னையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இவ் வழக்காடுமன்றத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ORHAN என்ற அமைப்பின்மூலம் விழிப்புலன் இழந்தோருக்கும் ஏனைய மாற்றுத் திறனாளிகளுக்கும் இவர் உதவி வருகிறார்.
தனது 60 வது பிறந்தநாள் விழாவையும் வித்தியாசமாக நடத்தி மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நடந்துள்ளார்.
அவரை பாராட்டுவோம். வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment