Friday, October 30, 2015

ஈழ தமிழ் அகதிகளை இந்தியா சிறப்புமுகாமில் அடைக்கிறது ! நோர்வே உதவி மேயராக தெரிவு செய்கிறது !!

•ஈழ தமிழ் அகதிகளை
இந்தியா சிறப்புமுகாமில் அடைக்கிறது !
நோர்வே உதவி மேயராக தெரிவு செய்கிறது !!
நோர்வே நாடு "வந்தாரை வாழவைக்கும் நாடு" என்று தன்னைத்தானே சொல்வதில்லை.
நோர்வே நாடு "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பெருமை பேசுவதில்லை
நோர்வே நாடு ஈழத் தமிழர்களை தமது "தொப்புள்கொடி உறவுகள்" என்று சொல்வதில்லை
என்றாலும்கூட அகதியாக வந்த ஈழத் தமிழர்களை அது பிரஜாவுரிமை வழங்கி அனைத்து உரிமைகளையும், வசதிகளையும் வழங்கி வருகிறது.
அதுமட்டுமல்ல ஒரு ஈழத் தமிழரை தனது தலைநகரின் உதவி மேயராகவும் தெரிவு செய்துள்ளது.
ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தனது தொப்புள்கொடி உறவுகளான ஈழ அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறது.
ஒன்று இரண்டல்ல மாறாக 25 வருடங்களுக்கு மேலாக தமிழக மண்ணில் இச் சிறப்புமுகாம் கொடுமைகள் தொடருகின்றன.
இலங்கை இனவெறி அரசுகூட வரும் 7ம் திகதிக்கு முன்னர் அனைத்து சிறைக்கைதிகளையும் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது.
ஆனால் "ஈழத்தாய்" என பட்டம் பெற்ற ஜெயா அம்மையாரோ சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்ய மறுத்து வருகிறார்.
என்னே கொடுமை இது!

No comments:

Post a Comment