Friday, October 30, 2015

• "சுத்துமாத்து" சுமந்திரனின் லண்டன் கூட்டம்!

• "சுத்துமாத்து" சுமந்திரனின் லண்டன் கூட்டம்!
இன்று 03.10.15 யன்று மாலை 4.30 மணிக்கு லண்டன் ஈஸ்ட்காமில் சுமந்திரன் அவர்களின் ரகசிய கூட்டம் நடைபெற்றது.
சுமந்திரன் தன்னை தமிழ் மக்களின் பிரதிநிதி என்கிறார். தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி என்கிறார். அப்படியானால் லண்டனில் தமிழ் மக்களை நேரில் சந்திக்க திராணியற்று ஏன் ரகசியமாக கூட்டம் நடத்துகிறார்?
இதுவரை வந்த இலங்கை அரசுகள் எவையும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காதபடியால்தான் பிரபாகரன்கள் உருவானார்கள் என்று சிங்கள ஜனாதிபதி சந்திரிக்கா கூறியிருக்கிறார். ஆனால் இலங்கை அரசு பல முறை தீர்வு தர முன்வந்தபோது தமிழ்மக்கள் அதனை நிராகரித்துவிட்டதாக சுமந்திரன் புது வரலாறு கூறுகிறார்.
சிங்கள தளபதி சரத்பொன்சேகா தமிழக தலைவர்களை கோமாளிகள் என்றார். அதேபோல் சுமந்திரன் தமிழக தலைவர்கள் "நேரம் ஒரு பேச்சு பேசும் தலைவர்கள்" என்று கிண்டல் செய்கிறார்.
ஈழத் தமிழ்மக்களுக்கு தமிழக மக்களின் அதரவு இல்லாமல் இருந்திருந்தால் இந் நேரம் இந்திய அரசு ஈழத் தமிழர்களை பூண்டோடு அழித்திருக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்திய அரசின் ஆதரவு எமக்கு இருக்கிறது. எனவே தமிழக ஆதரவு தேவையில்லை என்று சின்னப்பிள்ளைதனமாக சுமந்திரன் கூறுகிறார்.
இதுவரை 650 தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டது குறித்து எந்த கண்டனமும் தெரிவிக்காத சுமந்திரன், தமிழக அரசியல்வாதிகளின் 2000 ரோலர்கள் தினமும் வந்து ஈழக் கடற்பகுதியை அழிப்பதாக கூறுகிறார்.
தமிழக மக்கள் ஒனறி;னைந்து ஆதரவு வழங்கிய போது சுமந்திரன் தமிழக பல்கலைக்கழகத்தில் சொகுசாகப் படித்தவர்.
17 தமிழக இளைஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தபோது இவர் கொழும்பில் சொகுசாக வாழ்ந்தவர்.
தமிழக தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்காக சிறையில் வாடிய போது இவர் கொழும்பில் சிங்கள தலைவர்களுடன் விருந்துண்டவர்.
அப்படிப்பட்ட சுமந்திரன் கூறுகிறார் தமிழக தலைவர்களினதும் மக்களினதும் ஆதரவு தேவையில்லை என்று.
இவர் யார் என்று இப்பொது தெரிகிறதா?
இவர் வரலாற்றை ஏன் திரிக்கிறார் என்று புரிகிறதா?
இவரின் சுத்துமாத்துகள் யாவும் யாருக்காக என்று புரிகிறதா?
ஒரு பிய்ந்த செருப்பு இல்லாமற்போய்விட்டதே என்று என் வாழ்வில் இன்றுதான் நான் முதன் முதலாக கவலைப்பட்டேன்.

No comments:

Post a Comment