Friday, October 30, 2015

இந்த தலித் குழந்தைகள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொன்றார்களா?

• இந்த தலித் குழந்தைகள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொன்றார்களா?
டில்லிக்கு அருகில் ஒரு தலித் குடும்பம் பொலிசாரால் நிர்வாணமாக்கப்பட்டபோது அவர்கள்
தங்களை தாங்களே நிர்வாணமாக்கினார்கள் என்றார்கள்.
இப்போது அதே டில்லிக்கு அருகில் இரண்டு தலித் குழந்தைகள் தீயிட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதையும் அந்த குழந்தைகளே தங்களை தீயிட்டு கொன்றார்கள் எனக் கூறப்போகிறார்களா?
செய்தி- அரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத் மாவட்டத்தின் சன்பேர் என்ற கிராமத்தில் தலித் குடும்பம் ஒன்றை வீட்டினுள் வைத்து ராஜ்புத் சாதியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தியுள்ளனர். அதில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்றும், பத்து மாதம் நிரம்பிய பெண் குழந்தை ஒன்றும் தீயில் கருகி இறந்துள்ளன. அந்தக் குழந்தைகளின் தாய் ஆபத்தான நிலையில் தீக் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்- டாக்டர் அம்பேத்கார்

No comments:

Post a Comment