Friday, October 30, 2015

இந்தியா ஜனநாயக நாடுதானா?

இந்தியா ஜனநாயக நாடுதானா?
இந்தியா ஜனநாயக நாடு என்றும் இங்கு மக்களுக்கு கருத்து சுதந்திரம் , பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் உண்டு என்கிறார்கள்.
ஆனால் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று பாட்டு பாடியமைக்காக "மக்கள் பாடகன்" தோழர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வரமுடியாத தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் அடைக்கப்ட்டுள்ளார்.
ஊழல் பேர்வழிகள் சுதந்திரமாக திரிகிறார்கள்.
மணற்கொள்ளையர் சுதந்திரமாக திரிகிறார்கள்
குவாரி திருடர்கள் சுதந்திரமாக திரிகின்றார்கள்
ஆனால் மக்களுக்கா குரல் கொடுப்பவர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன.
அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
என்ன கொடுமை இது?
மதுவை ஒழிக்க குரல் கொடுத்த சசிபெருமாள் கொல்லப்பட்டார்.
மதுவை ஒழிக்க பாட்டுபாடிய கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுவுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது.
பெப்சிக்கு எதிராக போராடிய தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினருக்கு மண்டை உடைக்கப்பட்டது.
மதுரையில் கைது செய்யப்பட்ட தமிழ்தேச மக்கள் கட்சியினர் கடந்த 18 மாதங்களாக மதுரை சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது.
ஜெயா அம்மையாரின் அடக்குமுறையை மக்கள் உடைத்தெறிவார்கள்.
ஜெயா அம்மையாருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

No comments:

Post a Comment