Friday, October 30, 2015

•கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை இது!

•கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை இது!
சிறையில் உள்ளவர்கள் தம் விடுதலைகோரி 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்விக்க முடியாத சம்பந்தர் அய்யா, ஒரு வருடத்தில் இனப்பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவாராம்.
சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 5வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
சிறைக்கைதிகளின் விடுதலைக்கு ஆதரவாக தமிழ் அமைப்புகள் பலவும் குரல் கொடுத்ததோடு அடையாள போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ் பல்கலைக்;கழக மாணவர்களும் சிறையில் உள்ள கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சமவுரிமை இயக்கத்தின் சார்பில் சிங்கள மக்களும் வீதியில் இறங்கி குரல் கொடுத்துள்ளனர்.
இதுவரை இனவாதிகள் யாருமே இவ் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று கூறவில்லை.
இருப்பினும் தமிழர் வாக்கில் ஜனாதிபதியான மைத்திரி இது குறித்து அக்கறை செலுத்தவில்லை.
நல்லாட்சி செய்வதாக கூறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இது குறித்து அக்கறை எடுக்கவில்லை.
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவதாக கூறிய தமிழ்தேசியகூட்டமைப்பினரும் இவ் கைதிகளைச் சென்று பார்வையிடக்கூட முனையவில்லை.
இவ் சிறைக் கைதிகளை விடுவிக்கமுடியாதவர்கள் எப்படி ஒரு வருடத்திற்கள் தீர்வு பெறப்போகிறார்கள்?
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போறானாம.அதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.

No comments:

Post a Comment