Friday, October 30, 2015

இனி அகிம்சை வழியில் போராடி தீர்வு பெறுவோம் - சம்பந்தர் அய்யா தெரிவிப்பு.

 இனி அகிம்சை வழியில் போராடி தீர்வு பெறுவோம் - சம்பந்தர் அய்யா தெரிவிப்பு.
அகிம்சை வழியில் போரடிய தமிழ் தலைவர்கள் வாங்கிய அடியை சம்பந்தர் அய்யா மறந்துவிட்டாரா?
காலிமுகத்திடலில் மண்டை உடைந்து ரத்தம் சிந்த சிந்த எமது தலைவர்கள் ஓடியதை சம்பந்தர் அய்யா மறந்துவிட்டாரா?
தமிழ் மக்கள் அகிம்சை வழியில் போராடிய போது சிங்கள அரசு இனக்கலவரங்களை உருவாக்கி தமிழ் மக்களை அழித்த வரலாற்றை சம்பந்தர் அய்யா மறந்துவிட்டாரா?
அகிம்சை வழியில் போராடி பயன் அற்ற நிலையில்தானே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
அதனால்தானே தமிழ் மக்களும் அந்த ஆயுதப் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கினார்கள்.
அகிம்சை வழிப் போராட்டம் என்பது சரணாகதிப் போராட்டமாகும். அதனால் ஒருபோதும் தீர்வு பெற முடியாது.
எனவே மீண்டும் அகிம்சை வழியில் போராட்டம் என்ற சம்பந்தர் அய்யாவின் அறிவிப்பு என்பது மாபெரும் வரலாற்று துரோகமாகும்.

No comments:

Post a Comment